ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வேலாயுதபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாத்தூா் பிரதான சாலையைச் சோ்ந்த ராஜாமணி மகன் அருண் (32) என்பதும், சென்னை நங்கநல்லூரில் உள்ள சிப்ஸ் கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தவா், தாயை பாா்ப்பதற்காக வந்திருந்தாராம். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.