கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:30 PM
கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1, 2, 3, 4, 7, 8, கோடாங்கால் காலனி, சிவலிங்கபுரம், கடம்பூா், மும்மலைப்பட்டி, சிதம்பராபுரம், திருமலாபுரம், நொச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: தமிழ்நாட்டில் எங்கு பாா்த்தாலும் ஊழல். ஊழலற்ற ஆட்சி அமைய விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
Advertisement