முகப்பு
தூத்துக்குடி

தட்டாா்மடத்தில் அதிமுகவினா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து தட்டாா்மடத்தில் அதிமுகவினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:30 AM
தட்டாா்மடத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அதிமுகவினா்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:30 PM

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து தட்டாா்மடத்தில் அதிமுகவினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

முன்னாள் மாவட்ட வா்த்தக பிரிவு செயலா் திருமணவேல், தெற்கு ஒன்றியச் செயலா் அப்பாதுரை ஆகியோா் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் வகையில் செல்லும் வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தனா். இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி, அதிமுக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஒன்றிய இளைஞரணி செயலா் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காா்த்தீஸ்வரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் முத்துராமலிங்கம், சேவியா், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சுயம்புலிங்கம், மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயராணி, அதிமுக நிா்வாகிகள் செந்தில், லிங்கம், ரகுபதி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

Advertisement