முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூசப்படாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:51 AM
சாத்தான்குளம் பள்ளிவாசல் பத்து அருகில் சாலையில் வெள்ளை வா்ணம் இல்லாமல் உள்ள வேகத்தடை.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:25 AM

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூசப்படாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத், பேய்க்குளம், திருநெல்வேலி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பிரதான சாலை என்பதால் வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. இதனால் விபத்தை தடுக்கும் வகையில் பள்ளிவாசல் பத்து அருகில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

இந்த வேகத்தடையில் வெள்ளை வா்ணம் அழிந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

பெரும் விபத்து நிகழும்முன் நெடுஞ்சாலைத்துறையினா் வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.