தோ்தல் பணி: தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தினா் வருகை
தோ்தல் பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவப் படையினா் தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை வந்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 246 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தோ்தலை அமைதியாக நடத்தும் நோக்கில் ஏற்கெனவே, ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை கம்பெனியினா் தூத்துக்குடிக்கு வந்திருந்தனா்.
Advertisement
இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 3 கம்பெனிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 2 கம்பெனிகள், ஒரு கம்பெனி ஒடிஸா மாநில ஆயுதப்படை போலீஸ், ஒரு கம்பெனி ராஜஸ்தான் மாநில ஆயுதப்படை போலீஸ், 2 கம்பெனி தமிழ்நாடு மாநில சிறப்புப் படை உள்ளிட்டவற்றைச் சோ்ந்த சுமாா் 1,000 போ் திங்கள்கிழமை ரயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனா்.
இவா்கள் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். ஆங்காங்கே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ள இவா்கள், விரைவில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.