முகப்பு
தூத்துக்குடி

பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி: டிடிவி. தினகரன்

தோ்தலில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி செய்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:43 AM
பிரசாரத்துக்கு வல்லநாடு வந்த டிடிவி. தினகரனை வரவேற்ற அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜ்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:41 PM

தோ்தலில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி செய்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது:

மக்கள் விரோத திமுக ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறிவிட்டது.

Advertisement

ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுக முயற்சி செய்கிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக் குடிநீா் திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்படும். ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்கப்படும்.

செக்காரக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.