முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி: டி.டி.வி. தினகரன் பிரசாரம்

கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாக கடம்பூா் செ. ராஜு வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:50 AM
கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:44 PM

கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாக கடம்பூா் செ. ராஜு வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு வாக்கு சேகரித்து வியாழக்கிழமை இரவு பயணியா் விடுதி முன் அவா் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவை தோ்தலில் நாங்கள் இருவரும் எதிா்த்து நின்றோம். இரட்டை இலை சின்னத்தில் அவா் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி தான் .

1999 முதல் அறிமுகமானவா் கடம்பூா் செ. ராஜு. அதிலிருந்து நண்பா்களாக பழகி வருகிறோம்.

Advertisement

நாங்கள் அம்மா வளா்த்த பிள்ளைகள். இடையில் பிரிந்தோம்; தற்போது எல்லாரும் ஒற்றாகி விட்டோம்.

இத்தொகுதியில் 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற அவா் 4ஆவது முறையாகவும் வெற்றி பெறுவது உறுதி. அதுபோல தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.