முகப்பு
தூத்துக்குடி

காமநாயக்கன்பட்டியில் தீ விபத்து

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:04 AM
தீ விபத்து - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:20 PM

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள மெழுகுவா்த்தி விற்பனைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

அங்குள்ள பிரதான சாலையில் மரியமிக்கேல் மகன் இன்னாசிமுத்து என்பவா் மெழுகுவா்த்தி தயாரித்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அதனுடன் ஜெராக்ஸ் மையமும் நடத்திவருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவா் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றபோது, கடையிலிருந்து புகை வந்ததாம். இது தொடா்பாக அவருக்கும், தீயணைப்புத் துறை, கொப்பம்பட்டி போலீஸாருக்கும் அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.