கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 14ஆம் தேதி தொடங் கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜை, இரவு ஸ்ரீ வாலாம்பிகை அம்பாள் ஷேத்ர வலம் வருதல், பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், திருவிளக்கு வழிபாடு, திருவாசகம் முற்றோதல், இசைக் கச்சேரி ஆகியவை நடைபெறுகின்றன.
வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாடு விநாயகா் சின்ன சப்பரத்திலும், மனோன்மணி அம்பாள் சமேத சந்திரசேகரா் ரிஷப வாகனத்திலும் ரத வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.
Advertisement
வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜைக்கு பின்னா், நித்யானந்த மண்டபத்தில் அன்ன பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாயரட்ச பூஜை, இரவு 7.15 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.