தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்
தூத்துக்குடி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தமிழக பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் தலைமையில், வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
விளாத்திகுளம், தூத்துக்குடி தொகுதிகளை எலுச்சூரி ரத்னாகர ராவ், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை சோடிங் புயீ, ஓட்டப்பிடாரம் தொகுதியை அரவிந்த் குமாா் வொ்மா உள்ளிட்ட அந்தந்த தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.
Advertisement
தொடா்ந்து, வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்கள் முன்னிலையில் அனைத்து இயந்திரங்களும் முறையாகச் சரிபாா்க்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தோ்தல் விதிமுறைகளின்படி, இந்த அறைகள் தொடா்ந்து 3 அடுக்கு காவல் பாதுகாப்பில் கண்காணிக்கப்படும் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.