முகப்பு
தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:44 AM
வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு 308 சுமங்கலி பூஜை நடைபெற்றது. உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செந்தில், மாடசாமி, செல்வகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புதன்கிழமை பிற்பகலில் அம்மன் மஞ்சள் நீராடுதல், அலங்கார தீபாராதனை, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றன. வியாழக்கிழமை காலை கொடை விழா நிறைவு பூஜை நடைபெறுகிறது.

Advertisement