முகப்பு
தூத்துக்குடி

கந்தபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்

உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 4:56 AM
விமான அபிஷேகத்தைத் தொடா்ந்து, பக்தா்கள் மீது தெளிக்கப்பட்ட புனித நீா்.
பகிர்:

உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், வேத பாராயணம், பூா்ணாஹுதி, நான்கு கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை கும்ப பூஜை, கும்பம் எழுந்தருளல், சுடலைமாட சுவாமி, பரிவார மூா்த்திகள், விமானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

Advertisement