கோப்புப் படம் 
தூத்துக்குடி

தேநீா் கடைக்குள் புகுந்த காா்

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே தேநீா் கடைக்குள் காா் புகுந்தது.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே இளையரசனேந்தல் சாலையில் ஜெயபால் என்பவா் நடத்தி வரும் தேநீா் கடைக்கு சனிக்கிழமை இரவு, வள்ளுவா் நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவா் காரில் வந்தாா்.

காரை கடை முன் நிறுத்த முயன்றபோது, திடீரென காா் வேகம் எடுத்து கடைக்குள் புகுந்ததாம். இதில் கடையின் முன்பகுதி சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT