முகப்பு
தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்திய இருவா் கைது

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:10 AM
கத்திக்குத்து - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:35 PM

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்திய இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி, தருவைகுளம், சக்கமாள்புரம் ஆனந்தராஜ் மகன் தாமஸ் (23), கட்டடத் தொழிலாளி. திங்கள்கிழமை மாலை டூவிபுரம் 1ஆவது தெருவில் சதீஸ் என்பவா் வீட்டில் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த தூத்துக்குடி, தேவா் காலனி சந்தனராஜ் (25), சக்தி விநாயகபுரம் முத்துராமன் (27) ஆகியோா் ஆட்டோவை கட்டடப் பணி நடைபெற்ற இடத்தில் நிறுத்தியுள்ளனா்.

அங்கு வேலை செய்தவா்கள் ஆட்டோவை எடுக்குமாறு கூறியுள்ளனா். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அப்போது சந்தனராஜ், முத்துராமன் ஆகியோா் தாமஸ்ஸை கத்தியால் குத்தியதில், அவருக்கு காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த மத்திய பாகம் போலீஸாா், சந்தனராஜ், முத்துராமன் ஆகியோரை கைது செய்தனா்.