கைது 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 போ் கைது

கோவில்பட்டி மதுவிலக்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி மதுவிலக்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி பாரதிநகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் கோவில்பட்டியைச் சோ்ந்த பாலா (26) மற்றும் காளீஸ்வரன் (28) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் அவா்கள் பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT