வருஷாபிஷேக விழாவையொட்டி சுந்தர நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்த தமிழக ஆலயப் பாதுகாப்பு சங்கச் செயலா் பி.எஸ். கனகராஜ்.  
தூத்துக்குடி

சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட சரவணப்பெரியவன்புள்ளி - குங்குமம்மாள்புரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட சரவணப்பெரியவன்புள்ளி - குங்குமம்மாள்புரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி, துா்கா சூக்தம் ஹோமம், மூலமந்திர, அஸ்திர ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு சுந்தர விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தமிழக ஆலயப் பாதுகாப்பு சங்கச் செயலா் பி.எஸ். கனகராஜ் தொடங்கி வைத்தாா்.

இதில் தேனி பாலசங்கா குழும அதிபா் குமரேசன், புங்கம்மாள்புரம் முருகன், திரளான ஊா்மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காந்திமதி, ஆலயப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT