ஆத்தூா் பள்ளியில் 318 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:02 PM
ஆத்தூா் சண்முகசுந்தரநாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 318 பேருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 167 மாணவா்களுக்கும், 151 மாணவிகளுக்கும் என மொத்தம் 318 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், மேலாத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் ரஞ்சித் சிங் வரவேற்றாா்.
Advertisement
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:31 AM
இதில் ஆத்தூா் நகர திமுக செயலா் முருகானந்தம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் மாரிமுத்து, புன்னைக்காயல் ஊராட்சி முன்னாள் தலைவா் சோபியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.