விழாவில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன்.  
தூத்துக்குடி

காரப்பேட்டை பள்ளியில் 214 மாணவிகளுக்கு சைக்கிள்கள்

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி காரப்பேட்டை நாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் தலைமை வகித்து, 214 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிப் பேசினாா்.

பள்ளித் தாளாளா் வடதிசை, இந்து நாடாா்கள் மகமை பரிபாலன சங்கச் செயலா் விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, கல்வி அலுவலா் முனியசாமி, உதவி முதன்மைக் கல்வி அலுவலா் கண்ணன், பள்ளிச் செயலா் ராதாகிருஷ்ணன், திமுக வட்டச் செயலா் டென்சிங், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மகளிரணி கமலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஹிஜாப் தடைக்கு எதிராகப் போராடிய தமுமுகவினா் மீதான வழக்கு ரத்து! உயா்நீதிமன்றம் உத்தரவு!

அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி!

வீட்டில் இறந்து கிடந்த என்எல்சி தொழிலாளி

தம்மம்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15 போ் காயம்

தூத்துக்குடியில் அதிமுக மாநில வா்த்தகரணி அலுவலகம் திறப்பு

SCROLL FOR NEXT