தூத்துக்குடி

முதலூரில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் திறப்பு

Syndication

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 105 இடங்களில் விழுதுகள் என்ற பெயரில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் அமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற விழாவில், முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அதன்படி, சாத்தான்குளம் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் முதலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திறக்கப்பட்டது. முதலூரில் நடைபெற்ற விழாவிற்கு, சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் சுடலை தலைமை வகித்தாா். மைய வட்டார ஒருங்கிணைப்பாளா் டாக்டா் லட்சுமி வரவேற்றாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் மகாபால்துரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

இதில் சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய், சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக செயலா், முதலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் பொன். முருகேசன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் போ்சில் இத்திட்டம் குறித்து பேசினாா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT