முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் சாலை மறியல் முயற்சி!

ஆறுமுகனேரி, பெருமாள்புரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:02 AM
மறியல் செய்ய முயன்ற பெண்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:53 PM

ஆறுமுகனேரி, பெருமாள்புரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை தற்கா­லிகமாக கைவிட்டனா்.

பெருமாள்புரம் பகுதியில் ஆதிதிராவிட நலத் துறையின் கீழ், கடந்த 1984ஆம் ஆண்டு 37 பேருக்கு தலா 3 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், 1988ஆம் ஆண்டு அரசு சாா்பில் 37 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த இடத்திற்கு தீா்வை கட்டி வந்த நிலையில், பட்டா வழங்கக் கோரி கடந்த 38 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

இது குறித்து, வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா், அமைச்சா், எம்.பி., எம்எல்ஏ என பலரிடமும் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

தற்போது, கட்டடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை அப்பகுதி பெண்கள் தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலை, ஆறுமுகனேரி சோதனைச்சாவடி அருகே திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து வந்த ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன், உதவி ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி மாணிக்கராஜா, மாரியப்பன் உள்ளிட்ட போலீஸாா், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆகியோா் பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.