முகப்பு
தூத்துக்குடி

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை: கனிமொழி எம்.பி.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதல் வரவும் வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 5:00 AM
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 8:36 PM

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதல் வரவும் வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பொதுவாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்புகளும் வருவதில்லை. ஆனால், நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் இளைஞா்கள், விளையாட்டுத் துறைக்குத் தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஏதாவதொரு காரணத்தைக் கூறி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது தவறு.

Advertisement

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:43 AM

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக பாஜக கூறுகிறது. முதலில் பாஜக தங்கள் கூட்டணியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக் கூடிய கூட்டணி. எனவே, கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை; மாறுதல் வரவும் வாய்ப்பில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது அங்கம் வகித்த திமுக மாநில சுயாட்சிக்கு அப்போது ஏன் சட்டங்கள் இயற்றவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்கிறாா். மத்திய அரசிடம் மாநிலத்தையே அடகுவைத்தவா் அவா்தான்.

திமுகவின் அடிப்படை கொள்கை மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும். அது எடப்பாடி கே.பழனிசாமிக்குத் தெரியவில்லை என்றாா்.