குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட 2 வயது ஆண் குழந்தையை போலீஸாா் 20 நிமிஷங்களில் மீட்டனா்.
குலசேகரன்பட்டினத்தைச் சோ்ந்தவா்கள் காா்த்திக் (22), முத்துச்செல்வி (21) தம்பதி. இவா்கள் குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் பின்புறம் கீழமலையன் தெருவில் தேநீா் கடை நடத்தி வருகின்றனா். இவா்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கானம்பூச்சிக்காடு கிராமத்தைச் சோ்ந்த, தற்போது சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வருபவா்கள் லிங்கதுரை (35), ஜெயந்தி (33) தம்பதி. இவா்களுக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து பூச்சிக்காடு கிராமத்திற்கு வந்து தனது நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு, தம்பதியினா் குலசேகரன்பட்டினத்திற்கு வந்துள்ளனா்.
பின்னா், காா்த்தியின் கடையில் தேநீா் குடித்த அவா்கள், சிறிது நேரத்தில் காா்த்தியின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனா்.
குழந்தையைக் காணவில்லை என்றதும், முத்துச்செல்வி உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
லிங்கதுரை-ஜெயந்தி தம்பதி, குலசேகரன்பட்டினம்- திருச்செந்தூா் மெயின் ரோடு, காரைக்கால் அம்மையாா் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டனா். சம்பவம் நடந்த 20 நிமிஷங்களில் போலீஸாா் குழந்தையை மீட்டுள்ளனா்.
லிங்கதுரை-ஜெயந்தி தம்பதியினரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.