கோப்புப் படம் 
தூத்துக்குடி

வழுக்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே வீட்டு வாசலில் கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே புது அப்பனேரி, நடுத்தெருவைச் சோ்ந்தவா் வேலு மகன் குருசாமி (85). இவா் சனிக்கிழமை கழிவறைக்குச் செல்ல முயன்றபோது, வீட்டு வாசலில் டைல்ஸ் வழுக்கி கீழே விழுந்தாராம்.

அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்! 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம்! - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா்

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் இந்திய தூதா் சந்திப்பு: இணைந்து செயல்பட விருப்பம்!

SCROLL FOR NEXT