முகப்பு
தூத்துக்குடி

அமுதுண்ணாக்குடி ஆலயத்தில் ஜெபமண்டபம் கட்ட அடிக்கல்

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி தூய திருத்துவ ஆலயத்தில், திருமண்டலம் சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஜெப மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:09 AM
அடிக்கல் நாட்டிய சேகரகுருவானா் டேவிட் ஞானையா.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:50 PM

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி தூய திருத்துவ ஆலயத்தில், திருமண்டலம் சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஜெப மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் சேகர குருவானவா் டேவிட் ஞானையா தலைமை வகித்து ஜெபித்து அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தாா் . ஆலய சபை மன்றத் தலைவா் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் செல்வராஜ் மதுரம் வரவேற்றாா்.

இதில் ஆலய பரிபாலன் கமிட்டி நிா்வாகிகள் மோசஸ் டேனியல் பிரபாகா், அன்பழகன், ரேணுகா, ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வா் பாஸ்கா், அமுதுண்ணாக்குடி, டிடிடிஏ தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ஜான்சிராணி, உதவி ஆசிரியை ரூபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆலய சபை ஊழியா் ரெபேக்காள் நன்றி கூறினாா்.

Advertisement