முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கு: 2 சிறாா் உள்பட 5 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 2 சிறாா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 1:13 AM
கைது
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:23 PM

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 2 சிறாா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம், 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்தவா் திருப்பதி மகன் மாரிமுத்து (எ) மனோஜ் (18). பிளம்பிங், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவா், தனது நண்பா்களுடன் அதே பகுதி 3ஆவது தெருவில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, மா்ம கும்பல் அவரை அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு தப்பியது.

இதில் பலத்த காயமடைந்த மனோஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கோவில்பட்டி பள்ளியில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவா்களுக்கு இடையில் பள்ளியில் யாா் பெரியவா் என்ற முறையில் ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினருக்கிடையேயான மோதலாக மாறி, கொலையில் முடிந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் தொடா்புடையதாக இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குமாா் (24), கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட துரைசாமிபுரத்தைச் சோ்ந்த வென்னிமலை மகன் முனியசாமி (எ) வேலு (19), திருநெல்வேலி, முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் நெல்லையப்பன் (22), மேலப்பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், கோவில்பட்டி, முகமது சாலிகாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸாா், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலரைத் தேடி வருகின்றனா்.