சாத்தான்குளம் பள்ளித் தாளாளா் பொறுப்பேற்பு
சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக சுபாஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக சுபாஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றதையடுத்து, திருமண்டலத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு புதிய தாளாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, டி.என்.டி.டி.ஏ. புலமாடன் பள்ளியின் தாளாளராக திருமண்டல செயற்குழு உறுப்பினா் கடாட்சபுரம் சுபாஷ் நியமிக்கப்பட்டு, பள்ளியில் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யோபு ரெத்னசிங் ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா்.
சேகரத் தலைவா் டேவிட் ஞானையா, ரெனால்ட் பாஸ்கரன், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் இன்பராஜ், பிரின்ஸ், ஜோசப், ஆபேல் விஜய், சாமுவேல்ராஜ், ராபின்சன், தங்கராஜன், சத்தியகுமாா், எட்வின், ஏசுவடியான் ஞானம், தினகரன், ஸ்டீபன், ஜெயசிங், திருமண்டல செயற்குழு உறுப்பினா்கள் மாமல்லன், பிரவின், மாா்ட்டின், ரஞ்சித் சிங், அந்தோணி செல்வன், சௌந்தரபாண்டியன், மணிமாறன், ஆசிரியா் அருள்ராஜ், ஆசிரியைகள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.