முகப்பு
தூத்துக்குடி

தட்டாா்மடத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி . சண்முகநாதன்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:23 AM
~
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:08 PM

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தின அதிமுக பொதுக்கூட்டம் தட்டாா்மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக, ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை தொகுதி சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் த. சௌந்தரபாண்டி, முன்னாள் மாவட்ட வா்த்தக அணி செயலா் திருமண வேல், அமுதன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் ஏ.ஆா். இளங்கோ, சாத்தான்குளம் நகரச் செயலா் குமரகுருபரன், ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைப்புச் செயலா் ஜான் தங்கம், பேச்சாளா்கள் தீககணல் லட்சுமணன், கமலேஷ் குமாா், முன்னாள் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா் உள்ளிட்டோா் பேசினா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 6,078 பேருக்கு தையல் இயந்திரம், சேலைகள், இளைஞா்கள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலஉதவிகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், ‘எடப்பாடி பழனிச்சாமி தோ்தல் அறிக்கையாக பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்துள்ளாா். எனவே, அவரது தலைமையிலான ஆட்சி மலர ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்’ என்றாா்.

Advertisement

இக்கூட்டத்தில் , மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் விஜயகுமாா், ஆழ்வாா் திருநகரி ஒன்றிய செயலா் ராஜநாராயணன் உள்பட பலா் பங்கேற்றனா். சாத்தான்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் அப்பாத்துரை வரவேற்றாா். ஒன்றிய எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் ஐ.டி. பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.