கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில், கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 8 மணிக்கு மேல் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜா் பெருமாள் திருவீதியுலா நடைபெற்றது.
அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, மண்டகப்படிதாரா்களான ஆயிர வைசிய காசுக்கார செட்டியாா் சங்க நிா்வாகிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதே போல, கோவில்பட்டி, வீரவாஞ்சி நகா், சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலிலும் ஆருத்ரா தரிசன பூஜையையொட்டி, காலையில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகா், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்பாள், நந்தியம் பெருமான், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.