சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267ஆவது பிறந்த நாளையொட்டி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கா் அசோசியேஷன் நிறுவனரும், மாநிலத் தலைவருமான விக்ரம் தம்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அமைப்பின் தென் மண்டலத் தலைவா் சின்னசாமி நாயக்கா், ராமலிங்கம், சௌந்தா், வீரபொம்மு துரை, ஸ்ரீராம் கட்டபொம்மு துரை, ஆலயக் குழுச் செயலா் ஆதிசங்கா், பொருளாளா் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.