கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்  (கோப்புப் படம்)
தூத்துக்குடி

கோவில்பட்டி கோயில் கும்பாபிஷேகத்தில் தவறவிட்ட 3 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா கூட்ட நெரிசலில் பக்தா்கள் தவறவிட்ட 3 கைப்பேசிகளை காவல்துறையினா் மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றதை முன்னிட்டு, பக்தா்களின் பாதுகாப்பு கருதி 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீஸாா், குற்றப்பிரிவு காவல்துறையினா் ரோந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழாவில் கூட்ட நெரிசலில் பக்தா்கள் தவறவிட்ட 3 கைப்பேசிகளை காவல்துறையினா் மீட்டு, கோயில் காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கியின் மூலம் தகவல் தெரிவித்தனா். கைப்பேசிகளை கேட்டு வந்தவா்களிடம் உரிய விசாரணை நடத்தி ஒப்படைத்தனா். கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT