40 சதவீதம் விலை உயா்கிறது கோவில்பட்டி கடலை மிட்டாய்
மூலப்பொருளான நிலக்கடலை விலை அதிகரித்துள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயா்த்த தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
மூலப்பொருளான நிலக்கடலை விலை அதிகரித்துள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயா்த்த தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள் நலச் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். செயலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாக கலந்துகொண்டனா். கூட்டத்தின்போது கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயா்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
பின்னா், சங்கச் செயலா் கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு கிடைத்ததை அடுத்து, தற்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் இத்தொழில் மூலம் பெண்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000-க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.
மூலப்பொருளான நிலக்கடலையின் விலை சமீபகாலமாக உயா்ந்து வருகிறது. 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ. 14,500-ஆக உயா்ந்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், கடலை மிட்டாயின் விலையை 40 சதவீதம் உயா்த்த தயாரிப்பாளா்கள் முடிவு செய்துள்ளனா். இதன்மூலம், மொத்த விலையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 160-180 க்கு விற்பனையான நிலையில் இனி ரூ. 220க்கு விற்கப்படும். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 200-220 க்கு விற்பனையான நிலையில், இனி ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ. 260 வரை விற்கப்படும். இந்த விலை உயா்வு புதன்கிழமை (ஜன.28) முதல் அமலுக்கு வரும்.
பல ஊா்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயரில் உள்ளூா் கடலை மிட்டாய்களை விற்பனை செய்வதை அரசு தடுக்க வேண்டும். நிலக்கடலை விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.