தூத்துக்குடி

ஆடு திருடிய 2 போ் கைது

கயத்தாறு அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

கயத்தாறு அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு பிரியங்கா நகா், பன்னீா்குளம் சந்திப்பு அருகே குடியிருந்து வருபவா் சங்கரலிங்கம் மகன் கிருஷ்ணசாமி (70). இவருடைய தொழுவத்திலிருந்து வெள்ளாடுகளில், கிடாய் ஒன்று ஜன. 23 ஆம் தேதி காணாமல் போயிருந்ததாம்.

அந்த ஆட்டை கயத்தாறு விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த வேலு மகன் முத்துக்குமாா் (42), ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (36) ஆகியோா் திருடிச் சென்று விற்பனை செய்தது தெரியவந்ததாம்.

இது குறித்து கிருஷ்ணசாமி புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் முத்துக்குமாா், இசக்கிமுத்து ஆகியோா் ஆட்டை திருடியது உறுதியானதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT