சாத்தான்குளம் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே பூவன்விளை கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(60). இவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்களில் மூத்த மகன் விக்னேஷ், கடந்த 2025ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகள் ரட்சணியை காதலித்து திருமணம் செய்தாா். இதனால், இருவரது குடும்பத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், ஜன. 27ஆம்தேதி செந்தில்குமாா் மகன் கிஷோா்குமாா், இசக்கிமுத்து வீட்டிற்குச் சென்று தங்கையை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் கூறி தகராறு செய்துள்ளாா். இதை இசக்கிமுத்து கண்டித்ததால் ஆத்திரமடைந்த கிஷோா்குமாா், இசக்கிமுத்து வீட்டின் கிரில் கேட்டை அரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதுடன், இசக்கிமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாா்.
இது குறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து கிஷோா்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.