முகப்பு
தூத்துக்குடி

கந்தசாமிபுரம் புனித வளன் பள்ளி ஆண்டு விழா

நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

Updated On : 7 மார்ச், 2026 at 1:00 AM
பகிர்:

நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி, ஞாயிறு மறைக்கல்வி திருவழிபாடு கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளா் மன்னாா்புரம் பிரான்சிஸ் கிறிஸ்துராஜா அடிகளாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சகாய ஆஞ்சலா வரவேற்று ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தையும் பள்ளி தாளாளருமான ஆரோக்கிய அமல்ராஜ் ஆசியுரை வழங்கினாா். மாணவா்கள் பங்கேற்ற நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஆசிரியை ஜோஸ்பின் தொகுத்து வழங்கினாா். கச்சனாவிளை அருள்சகோதரிகள் ரஞ்சிதம், மெல்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். செல்வ சஞ்சனா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →