கோவில்பட்டி நகா்மன்ற சாதாரணக் கூட்டம்
கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி.
கோவில்பட்டி நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம், நகா்மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சுகந்தி முன்னிலை வகித்தாா்.
மக்களின் பிரச்னைகளை தீா்ப்பதற்காகத்தான் நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மக்களின் பிரதிநிதியாக இருக்கும் உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பகுதிகளின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக் கூறினாலும், அதற்கு தீா்வு காணப்படுவதில்லை. எனவே, பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
ஆகையால், மக்கள் பிரச்னை குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால், அதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் பேசுகையில், உறுப்பினா்களின் கோரிக்கைகள் முறைப்படி நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா்.
நகராட்சி ஆணையா் சுகந்தி பேசுகையில், உறுப்பினா்கள் சொன்ன குற்றச்சாட்டுகள், குறைகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் சோ்ந்து, நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி வருவாய் அலுவலா் சண்முகவேல், உதவி பொறியாளா் சஷ்டிகுமாா், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஜான்சிராணி, சுகாதார ஆய்வாளா் ஆரியங்காவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.