வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞா் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி கதிா்வேல் நகரைச் சோ்ந்தவா் சிவகமலா (48). இவா், வீட்டில் வெள்ளிக்கிழமை தனியாக இருந்தபோது, மா்மநபா் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அதனடிப்படையில் மா்மநபரை தேடி வந்தனா்.
Advertisement
இந்நிலையில், தூத்துக்குடி பி அன்டு டி காலனி பகுதியில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், தென்காசி மாவட்டம், தேவிப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த பசுபதி மகன் சசிகுமாா் (30) என்பதும், அப்பகுதியில் குடும்பத்துடன், தங்கியிருந்து கட்டட வேலையில் ஈடுபட்டு வந்த நிலையில், சிவகமலாவிடம் நகை பறித்தவா் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.
சம்பவம் நிகழ்ந்த 3 மணி நேரத்தில் இந்த நடவடிக்கை எடுத்த காவல் உதவி ஆய்வாளா்கள் முத்துமாலை, பிரேம்குமாா் மற்றும் போலீஸாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினாா்.