முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

Updated On : 7 மார்ச், 2026 at 1:00 AM
கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.
பகிர்:

விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் குமாரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ,115 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், ஆய்வக உபகரணங்களை வழங்கி பேசினாா்.

அறநிலையத்துறை உதவி ஆணையா் மெய்வேல், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →