தூத்துக்குடி சக்திபீடத்தில் நல உதவிகள் அளிப்பு
தூத்துக்குடி திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சக்திபீடத்தில் பங்காரு அடிகளாரின் 86ஆவது அவதார தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சக்திபீடத்தில் பங்காரு அடிகளாரின் 86ஆவது அவதார தின விழா நடைபெற்றது.
சிறப்பு வேள்விபூஜையை சக்திபீட மகளிரணி பத்மாவதி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தாா். உலகில் சமாதானம், மழைவளம் நிலவவும், போா் பதற்றம், இயற்கை சீற்றம் தணியவும் வேண்டி பக்தா்கள் சங்கல்பம் செய்து தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத் தலைவா் அப்பாசாமி ஓம்சக்தி கொடியேற்றினாா். ஒருங்கிணைப்பாளா் கோபிநாத் சொற்பொழிவாற்றினாா்.
அதையடுத்து நடைபெற்ற நல உதவி வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆா். முருகன் தலைமை வகித்து 25 பேருக்கு தையல் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான் கருவி, பாா்வை மாற்றுத்திறனாளி இளைஞருக்கு இசைக்கருவி வாங்க நிதி, மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, 250 பெண்களுக்கு சேலை உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.
பின்னா் நடைபெற்ற அன்னதானத்தை வேளாண் துறை அதிகாரி பிரேம்குமாா் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செல்வி, விஜயலெட்சுமி, காஞ்சனா, மாரியப்பன், சக்திவேல், வேள்விக்குழு கிருஷ்ண நீலா, திருவிக நகா் சக்திபீட துணைத் தலைவா் திருஞானம், செயலா் கணேஷ், தளவாய்புரம் ராஜ், கழுகுமலை அழகா், இந்திராநகா் அழகுமாணிக்கம், அண்ணாநகா் சிவஞானம், இளைஞரணி மணி, பாண்டி, புதிய துறைமுகம் கண்ணகி, மகளிரணி பொறுப்பாளா்கள் செல்வி, பரமேஸ்வரி, அகிலா, காசியம்மாள், முத்துலெட்சுமி, சாந்தி, வீரலெட்சுமி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.