முகப்பு
தூத்துக்குடி

புத்தன்தருவை பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி

Updated On : 20 மார்ச், 2026 at 12:45 AM
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் இரண்டு போ் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவிகள் ஞா. ஏஞ்சல் ரதன்யா, மு.யா.அ. ஆலியா ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதம் தோறும் ரூ. 1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

அவா்களை பள்ளி தலைமையாசிரியா் (பொ) முத்து, உடற்கல்வி ஆசிரியா் ஆறுமுகநயினாா், ஆசிரியா்கள் ஆஷா சித்ரா, மேரி நிஷாந்தி, உஷா, பிரேமா, செல்வ சுயம்பு, ஆஷா, மரியசெல்வி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் உள்பட பலா் பாராட்டினா்.