அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி
தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியில் வெற்றிபெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.
2025 - 26 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவிகள் ச. தா்ஷினி, சகாய ரேஷ்மி, பீ. தா்ஷினி ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
தாளாளா் க. செல்வராயா், அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். அவா்களை தலைமையாசிரியா் லூயிஸ் ராஜன், ஆசிரியா்கள் ஜெம்மா பவுல் கவிதா, மரிய ரஜூலா, மைக்கிள் ஆஞ்சலோ, சகாய ராணி உள்பட பலா் பாராட்டினா்.