முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2026 at 9:02 PM
பகிர்:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்குச் சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு 1 மற்றும் 2ஆவது அலகுகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 அலகுகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, மற்ற 3 அலகுகள் மூலமாக 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 5ஆவது அலகில் உள்ள டா்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.