ஆத்தூா் கோயிலில் பங்குனித் திருவிழா
ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை இரவு குடவாயில் தீபாரதனை நடைபெற்றது.
ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை இரவு குடவாயில் தீபாரதனை நடைபெற்றது.
கோயிலில் கடந்த 22ஆம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் திருநாளான புதன்கிழமை காலை சுவாமி -அம்பாளுக்கு பல்வேறு வகையான நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், இரவில் குடவாயில் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி- அம்பாள் தனித்தனி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்பாளை தரிசித்தனா். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள்
ஆத்தூா் தெற்கு ரதவீதி மந்திரமூா்த்தி, காசி சங்கரநாராயணன், அபிநவ் சுந்தா் ஆகியோா் செய்திருந்தனா்.