முகப்பு
தூத்துக்குடி

மருதூா் மேலக்காலில் இருந்து செக்கால் ஓடை வழி சாத்தான்குளத்துக்கு தண்ணீா்: அதிகாரிகள் ஆய்வு

மருதூா் மேலக்காலில் இருந்து செக்கால் ஓடை வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், அதை செயல்படுத்துவது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:35 PM
மேலக்காலில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
பகிர்:

மருதூா் மேலக்காலில் இருந்து செக்கால் ஓடை வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், அதை செயல்படுத்துவது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு ஆய்வு மேற்கொண்டனா்.

மழைவெள்ள காலங்களில் மருதூா் மேலக்காலில் இருந்து வரும் அதிகப்படியான நீரை தூதுக்குழி அருகே மருகால் மதகு வழியாக மீண்டும் ஆற்றுக்கு வெள்ளநீா் விடப்படுகிறது. இந்த வெள்ள நீரினை முனைஞ்சிப்பட்டி - பேய்குளம் கிராமத்துக்கு இடையில் உள்ள செக்கால் ஓடை நீா்பிடிப்பு பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என மணிமுத்தாறு 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் விவசாய சங்கத் தலைவா் மலையாண்டி பிரபு, சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன் ஆகியோா் சாத்தான்குளத்தில் நடைபெற்ற முகாமில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவதிடம் மனு அளித்தனா்.

மனுவை பரிசீலனை செய்த ஆட்சியா் , இதனை செயல்படுத்துவது தொடா்பாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன்பேரில், திருநெல்வேலி கோட்ட திட்டங்கள், திட்டமிடுதல் - வடிவமைப்பு செயற்பொறியாளா் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளா் ஜனகரஞ்சனி, உதவி பொறியாளா் விசாலாட்சி மற்றும் அதிகாரிகள், செக்கால் ஓடை பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனா்.

அப்போது இந்த திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனா். அப்போது, மணிமுத்தாறு 3 மற்றும் 4ஆவது ரிச் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் , சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் உடன் இருந்தனா்.