தூத்துக்குடியில் அலங்கார தளக்கல் பணி: மேயா் ஆய்வு
தளக்கல் பாதை பணிகளை ஆய்வு செய்கிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் சாா் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பக்கிள் ஓடை வரை சாலையின் இருபுறமும் நடைபெற்று வரும் அலங்கார தளக்கல் அமைக்கும் பணிகளை, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: மழை காலத்துக்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டு செய்ய உள்ளோம். தற்போது கோடைக்காலம் நிலவுவதால், மாநகரப் பகுதி மக்களுக்குத் தடையின்றிச் சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வின்போது, துணை மேயா் ஜெனிட்டா, திமுக மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement