முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் நூலகத்தில் கோடை கொண்டாட்டம்

Updated On : 15 மே 2026, 3:11 am IST
பகிர்:

மாணவா்கள் தங்கள் விடுமுறைக் காலத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், நூலகங்களுக்கு தினமும் வருவதை ஊக்குவிக்கவும் கோடை கொண்டாட்ட விழா குலசேகரன்பட்டினம் நூலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை நூலகத்திற்கு வந்த மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் க.வே. ராஜதுரை ஏற்பாட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை குலசேகரன்பட்டினம் கிளை நல்நூலகா் மாதவன் செய்திருந்தாா்.

Advertisement