கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் வாசகா்களுக்கு சான்றிதழ்கள்
கோவில்பட்டியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், அதிகளவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், அதிகளவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கிய இத்திருவிழா இம்மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதிகமான வாசகா்களை ஈா்க்கும் வகையிலும், வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையிலும் ரூ. ஆயிரத்துக்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு செம்மல்’ சான்றிதழும், ரூ. 2,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு சிகரம்’ சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சனிக்கிழமை அதிக புத்தகங்கள் வாங்கியோருக்கு சாகித்திய அகாதெமி விருதாளா் சோ. தா்மன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
Advertisement
இதில், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா, நிா்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, காா்த்திக், காளிராஜ், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் முத்துச்செல்வம், வாசகா் வட்ட நிா்வாகிகள் முத்துமுருகன், நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.