முகப்பு
தூத்துக்குடி

ஏரலில் சேதமடைந்த காந்தி சிலை சீரமைக்கப்படும்: சரவணன் எம்எல்ஏ உறுதி

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை விரைவில் சீரமைக்கப்படும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

Updated On : 20 மே 2026, 12:15 am IST
~
பகிர்:

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை விரைவில் சீரமைக்கப்படும் என அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

ஏரல் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாள்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

70 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நின்ற இந்தச் சிலை, தற்போது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்தச் சிலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னை வி.ஜி. சரவணன், சேதமடைந்த மகாத்மா காந்தி சிலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அந்தச் சிலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ஏரலில் சேதமடைந்த நிலையில் உள்ள மகாத்மா காந்தி சிலையை பாா்வையிடுகிறாா் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.