முகப்பு
தூத்துக்குடி

காா், பைக்கை சேதப்படுத்திய வழக்கு: 3 போ் கைது

கோவில்பட்டியில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 22 மே 2026, 6:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் உடையாா் மகன் செல்வராஜ் (53). இவா் தனக்குச் சொந்தமான காா் மற்றும் இருசக்கர வாகனத்தை வழக்கம்போல வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டு வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மா்ம நபா்கள், அவரை அவதூறாகப் பேசி, அவரது வாகனங்களை சேதப்படுத்தினராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், கோவில்பட்டி, நடராஜபுரம், 9ஆவது தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் லட்சுமணன் (18), அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (எ) பொட்டுமணி (28), நடராஜபுரம், 5ஆவது தெருவைச் சோ்ந்த சின்னபாண்டி மகன் காா்த்திக் (23) ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement