முகப்பு
திருச்சி

பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்படுமா?

பேராவூரணி,டிச.23:   தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.     தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் பேராவூரணி வட்டம் அமைந்துள்ளது. இங்கு

திருச்சி

பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்படுமா?

பேராவூரணி,டிச.23:   தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.     தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் பேராவூரணி வட்டம் அமைந்துள்ளது. இங்கு

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:39 PM
பகிர்:

பேராவூரணி,டிச.23:   தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் பேராவூரணி வட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள காவல் நிலையத்தில்     பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப காவலர் பணியிடங்கள் உயர்த்தப்படாததால் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

28 கிராமங்களையும், 64 குக்கிராமங்களையும் உள்ளடக்கிய பேராவூரணி காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 20 மட்டுமே.

   இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அரசியல் பிரமுகர்கள், மத்திய, மாநில அமைச்சர்களின் நிகழ்ச்சிகளுக்காக பாதுகாப்புப் பணிக்குச் சென்றுவிடுகின்றனர்.

  இதனால் விபத்து, தகராறுகள் நிகழ்கின்ற நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வாளர் தலைமையில் இயங்கும் காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, இதுநாள் வரை பொறுப்பேற்ற ஆய்வாளர்களில் ஒருவர் கூட ஒருசில மாதங்கள் கூட பணிபுரியாமல் விடுப்பிலும், வேறு ஊர்களுக்கு பணி மாறுதலிலும் சென்று விடுகின்றனர்.

  கடந்த 6 மாதங்களாக ஆய்வாளர் பணிக்கு நிரந்தரமாக யாரும் நியமனம் செய்யப்படாமல் அருகிலுள்ள திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்களின் பொறுப்பிலேயே பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பொறுப்பான பதில் சொல்ல முடியாத நிலை உள்ளது.

   கடந்த ஓராண்டில் பேராவூரணி பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளன. இதனை விசாரிக்க குற்றப்பிரிவுக்கென தனிக் காவலர்கள் இல்லை.

  காவல் நிலையம் செயல்படும் இந்தக் கட்டடம் 1950 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  இந்தக் கட்டடம் மிகவும் சிதிலமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

 எனவே, காவல் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  இதுகுறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.வி.ஆர். வீரகபிலன் கூறியது:

   பேராவூரணி காவல் நிலையத்தில் கடந்த பல மாதங்களாக காவல் ஆய்வாளர் நிரந்தரமாக நியமிக்கப்படாததால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

   சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் தொடர்வது குறையவும் தமிழக முதல்வர் கருணாநிதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →