திருச்சி

தொழிலாளி மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி மனைவியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். 
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உஷா(52). இருவரும் வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் திருச்சி ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
எடமலைப்பட்டிபுதூர் சோதனை சாவடி அருகே சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், உஷா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.  
இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு மற்ற வாகன ஓட்டிகள் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT